
வேண்டாம் வேண்டாம் என்று
விட்டு விலகினாலும்- எனை
விட்டு விடுவதாய் நீயில்லை.
துரத்தி துரத்தி எனை பின்தொடர்கிறாயே?
எங்கு நான் சென்றாலும்....
என்பின்னால் அலைகிறாயே?
ஏன்.......? எதற்காக.................?
எனக்கென்று இங்கு எதுவுமில்லையான பின்பும்.......
எதற்காக என்பின்னே அலைகிறாயோ?
நான் அறியேன்............!
"உன்னைப்போல் நானிருப்பேன்!
உன்னோடு தானிருப்பேன்!
உனக்காக நானிறப்பேன்!
உனக்குள்ளும் கலந்திருப்பேன்!
எனை ஏற்றுக்கொண்டுவிடு.. -உன்
காலடியில் நானிருப்பேன்!"
என்றெல்லாம் என்றெல்லாம்.....
ஆசை வார்த்தைகள் கூறி,
எனையடைந்துவிட முயற்சிக்கிறாயே?
எவ்வளவுதான் நீ முயற்சித்தாலும்...
என்னால் முடியாது........ ஏனெனில்.................
நான்
நிஜங்களையே அதிகம் நேசிக்கிறேன்!
நிழல் நின்னையல்ல...........!
நிஜங்களையே அதிகம் நேசிக்கிறேன்!
நிழல் நின்னையல்ல...........!
No comments:
Post a Comment